by Staff Writer 25-10-2018 | 7:34 PM
Colombo (News 1st) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாலக்க டி சில்வா கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான கொலை சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் ஐந்தாவது நாளான இன்று, வாக்குமூலம் வழங்குவதற்காக நாலக்க டி சில்வா இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.