தென்கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

தென்கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது

by Staff Writer 24-10-2018 | 4:12 PM
Colombo (News 1st) தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று மாலை 4 மணியில் இருந்து காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எல். அப்துல் சத்தார் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.