மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்

by Staff Writer 23-10-2018 | 8:49 PM
Colombo (News 1st)  மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் வங்கியின் புதிய தலைவர் சுஜாதா குரே ஏற்கனவே துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளராகவும் நிதி அமைச்சின் உதவி செயலாளராகவும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் குழு உறுப்பினராகவும் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன், சம்பளம் மற்றும் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் அவர் செயற்பட்டுள்ளார். ஜனாதிபதியால் மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பணிப்பாளர் சபை நேற்று (22) மாலை கலைக்கப்பட்டதுடன், அதற்கான நியமனங்கள் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளன.