இஸ்லாமிய பொருளாதார மன்றம் கொழும்பில் கூடியது

தெற்காசியாவின் இஸ்லாமிய பொருளாதார மன்றம் கொழும்பில் கூடியது

by Staff Writer 23-10-2018 | 8:21 PM
Colombo (News 1st) தெற்காசியாவின் இஸ்லாமிய பொருளாதார மன்றம் கொழும்பில் இன்று கூடியது. பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் எனும் நோக்கில் இந்த மாநாடு இடம்பெற்றது. Adl Capital நிறுவனத்தின் இணை இயக்குநர் சப்ரி அப்துல் காதரின் பங்குபற்றுதலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நிதி மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். இலங்கை மற்றும் சார் பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் பல்வேறு காரணிகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது.