ஊருபொக்க துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மாத்தறை - ஊருபொக்க துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by Staff Writer 22-10-2018 | 10:38 AM
Colombo (News 1st) மாத்தறை - ஊருபொக்க பகுதியில் இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 44 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மற்றுமொரு மோட்டார்சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளனர். இன்று காலை 9.25 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல - அகுருஸ்ஸவத்த பகுதியை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் ஹீகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்