ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-10-2018 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 02. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 03. வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். 04. தொழிலைப் பெற்றுக்கொள்ளும் தமது உரிமையை அரசாங்கம் வழங்க மறுப்பதாக பட்டதாரி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. ரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். 02. மாலைதீவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யக்கோரிய முறைப்பாட்டை, அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்