by Staff Writer 22-10-2018 | 3:53 PM
சியம்பலாண்டுவ பகுதியில் ரி 56 ரக - 3000 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்கு 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இரண்டு பிரதி பொலிஸ்மா அதிபர்களின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சியம்பலாண்டுவ பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ரி56 ரக - 3000 துப்பாக்கி ரவைகளுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட சுஜியின் முக்கிய உதவியாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்த எம்.எம். வகையிலான 32 துப்பாக்கி ரவைகளும் சொகுசு ரக வேனொன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.