by Staff Writer 21-10-2018 | 6:20 PM
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, கலஹா - புப்புரஸ்ஸ பிரதான வீதியின் லெவலன் பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், அந்த வீதியூடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கலஹா - புப்புரஸ்ஸ பிரதான வீதியின் லெவலன் பகுதியில் பாரியளவான 2 கற்பாறைகள் நேற்றிரவு சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால், இந்த வீதியூடாக சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிப்பதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.
கலஹா - புபுரஸ்ஸவிற்கான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பாரிய கற்பாறை சரிந்து விழும் நிலையிலுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக மன்னார் - புத்தளம் பிரதான வீதியின் எழுவான்குளம் சப்பாத்து பாலத்திற்கு மேலாக வௌ்ளம் பாய்கிறது.
கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, பாலத்திற்கு மேலாக சுமார் இரண்டு அடிக்கு நீர் நிரம்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, மன்னார் - புத்தம் வீதியுடனான போக்குவரத்து மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.