ஜெஹான் அமரதுங்க இராஜினாமா

மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா

by Staff Writer 20-10-2018 | 11:38 AM
Colombo (News 1st) மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்ததாக, பணிப்பாளர் குழுவின் செயலாளர், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் ரொஹான் பத்திரனகே தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அவர் இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், குழுவின் உறுப்பினரான கிரிஷ் ராஜேந்திரனின் பதவிக்காலமும் நீடிக்கப்படவில்லை. தற்போது மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவில் 6 பேர் மட்டுமே அங்கத்தவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.