by Staff Writer 20-10-2018 | 11:14 AM
Colombo (News 1st) அம்பத்தலேயிலிருந்து கோட்டை ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயின் திருத்தப்பணிகள் இன்று (20) அதிகாலை நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து, நீர் விநியோக நடவடிக்கைகள் இன்று அதிகாலை முதல் வழமைபோன்று இடம்பெறுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
எனினும், நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பகுதி, கொழும்பு 5,7,8 ஆகிய இடங்களின் மேட்டு பகுதிகளுக்கு இதுவரை நீர் விநியோகிகப்படவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இதனைத்தவிர, கொழும்பு 6, பொரலஸ்கமுவ, மஹரகம நகர சபைக்குட்பட்ட சில பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று பிற்பகலுக்கு முன்னர் வழமைபோன்று நீரை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளுக்கு நேற்று நண்பகல் முதல் 17 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.