கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 17 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

by Staff Writer 19-10-2018 | 3:25 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் 17 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட கொழும்பு 5, 7, 8 ஆகிய பகுதிகளுக்கு இன்று நண்பகல் 12 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அம்பத்தல முதல் ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், நாளை காலை 5 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் கொழும்பு - 6, பொரலஸ்கமுவ மற்றும் மஹரகம நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.