திரிபுபடுத்தி தகவல் வழங்கல்: ஆராய வேண்டும்

திரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் - மஹிந்த சமரசிங்க

by Staff Writer 18-10-2018 | 1:01 PM
Colombo (News 1st) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சையைத் தோற்றுவிக்கும் நோக்கில் இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.