குருணாகலயில் பிறந்து சில நாட்களேயான சிசு மீட்பு

குருணாகலையில் பிறந்து சில நாட்களேயான சிசு மீட்பு

by Staff Writer 18-10-2018 | 2:05 PM
Colombo (News 1st) குருணாகலை சுற்றுவட்டத்திற்கு அண்மையிலிருந்து பிறந்து சில தினங்களே ஆன சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சிசுவைக் கண்ட நபர் ஒருவர் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் அறிவித்ததை அடுத்து, பொலிஸ் அதிகாரிகள் வந்து குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த குழந்தையை கைவிட்டு சென்ற நபரை குருணாகலை பொலிஸார் தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்