ஸ்ரீ.சு.க வை மீள கட்டியெழுப்ப 2 குழுக்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு இரு குழுக்கள் நியமனம்

by Staff Writer 17-10-2018 | 7:00 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இரவு 7.30 மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகிய கூட்டம், சுமார் 2 மணித்தியாலங்கள் வரை நீடித்ததாக நியூஸ் பெஸ்டின் செய்தியாளர் தெரிவித்தார். எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதுடன் குறித்த கூட்டம் இரண்டு மணித்தியாலங்கள் வரை நடைபெற்றது. கடந்த காலத் தேர்தலின் போதான விடயதானங்கள் மற்றும் குறைகளை எதிர்காலத்தில் நிவர்த்திப்பதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுக்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். ஒரு குழுவுக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைவராகவும் மற்றைய குழுவுக்கு தயாசிறி ஜயசேகர தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.