by Staff Writer 17-10-2018 | 11:10 AM
Colombo (News 1st) சதொச பொருட்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் குருணாகல் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர முன்னிலையில் இன்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பதற்கு போதிய சாட்சி இல்லாமை மற்றும் வழக்கின் உறுதியற்ற தன்மை காரணமாக பிரதிவாதிகளை விடுதலை செய்வதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.