தெபுவன பொலிஸ் சார்ஜன் மீண்டும் சேவையில் இணைப்பு

தெபுவன பொலிஸ் சார்ஜன் மீண்டும் சேவையில் இணைப்பு

by Staff Writer 17-10-2018 | 11:25 AM
Colombo (News 1st) சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த தெபுவன பொலிஸ் நிலையத்துடன் இணைந்த வகையில் சேவை புரிந்த பொலிஸ் சார்ஜன் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரினால் நேற்று மாலை அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். சேவையில் இருந்து நீக்கப்பட்ட தெபுவன பொலிஸ் சார்ஜன் சனத் குணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்ததுடன், ஜனாதிபதி அவருக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார். தம்மால் கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய லொறியை தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த பொலிஸ் சார்ஜன் வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து சர்ச்சை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.