65 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் 65 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது

by Staff Writer 17-10-2018 | 7:09 AM
Colombo (News 1st) சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கடத்த முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையில், குறித்த சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர். தனது உடல் மற்றும் ஆடைக்குள் மறைத்துவைத்த நிலையில் ஒரு கிலோ 206 கிராம் தங்க நகைகளை சந்தேக நபர் கடத்த முயற்சித்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தங்க செயின்கள் 65, 6 வளையல்கள் உட்பட பெருமளவிலான நகைகளை சந்தேக நபர் கடத்த முயற்சித்துள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.