இரண்டு அரச வங்கிகளின் பணிப்பாளர் சபை கலைப்பு 

இரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

by Staff Writer 17-10-2018 | 9:49 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபைகளின் பணிப்பாளர் சபைகளைக் கலைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் தனது பதவியை நேற்றைய தினம் இராஜினாமா செய்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகளை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.