விமல் வீரவன்ச விசேட மனுத்தாக்கல்

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டமூலம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரானது: விமல் வீரவன்ச மனுத்தாக்கல்

by Staff Writer 16-10-2018 | 5:19 PM
Colombo (News 1st)  புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரானது என பொருட்கோடல் வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உயர் நீதிமன்றத்தில் இன்று விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த சட்டமூலம் பொதுமக்கள் கருத்துக்கணிப்பிற்கு விடப்படவேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட வேண்டுமென பொருட்கோடல் வழங்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் கடந்த 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.