பம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயம்

பம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை

by Staff Writer 16-10-2018 | 7:32 AM
Colombo (News 1st) வவுனியா - பம்பைமடு பிரதேசத்தில் தரிசு நிலமாகவுள்ள 16,000 ஏக்கர் காணியில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைக்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த வலயத்தில் பயிர்ச்செய்கைக்குத் தேவையான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்கீழ், 1,25,000 கிலோகிராம் விதைகள் வழங்கப்படவுள்ளன. இந்த உழுந்து விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.