இலங்கை தேயிலை குறித்து பிரசார நடவடிக்கை

இலங்கை தேயிலை குறித்து பிரசார நடவடிக்கை

by Staff Writer 16-10-2018 | 1:46 PM
Colombo (News 1st) இலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை தேயிலை சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அதனைத் தொடர்ந்து சீனாவிலும் நடைபெறும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசிலி விஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக 350 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.