சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம்

சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம்

by Staff Writer 15-10-2018 | 6:10 AM
Colombo (News 1st) சீகிரியா குன்றில் உள்ள புராதன சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ள மிகவும் பழைமையான சுவரோவியங்களாக சீகிரியா சுவரோவியங்கள் கருதப்படுகின்றன. களனிப் பல்கலைக்கழகம், ஜேர்மனியின் வெமபட் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியன இணைந்து சீகிரியா சுவரோவியங்களை பாதுகாக்க விசேட திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பேராசிரியர் பி.டி. நந்தசேன கூறியுள்ளார்.