ஓலைக்குடிசை கல்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி

கற்பிட்டி - சிந்தாத்ரிமாத்தா பாடசாலை மாணவர்களின் ஓலைக்குடிசைக் கல்விக்கு இன்றுடன் முடிவு

by Staff Writer 15-10-2018 | 9:57 AM
Colombo (News 1st) கற்பிட்டி - சிந்தாத்ரிமாத்தா ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மக்கள் சக்தியினால் இன்று தீர்வு வழங்கப்பட்டுள்ளது. கற்பிட்டி சிந்தாத்ரிமாத்தா ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் எவ்வித அடிப்படை வசதியுமற்ற ஓலைக்குடிசையிலேயே கல்வி பயின்றனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தினூடாக நாம் இந்தப் பாடசாலைக்கு சென்ற போது, பாடசாலைக்கு நிரந்தர கட்டடமொன்றை அமைத்துத் தருமாறு கோரினர். இதனடிப்படையில், லங்கென் அமைப்புடன் இணைந்து, மக்கள் சக்தி 1000 வேலைத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக கடந்த 19 ஆம் திகதி அடிக்கல் நாட்டியிருந்தோம். புதிய வாரம் ஆரம்பிக்கும் இன்றைய தினத்தில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு மக்கள் சக்தி மற்றும் லங்கென் நிறுவனத்தின் உதவியினால் நிம்மதியாக கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.