இலங்கை - பங்களாதேஷ் இளையோர் சமர் நாளை ஆரம்பம்

இலங்கை - பங்களாதேஷ் இளையோர் சமர் நாளை ஆரம்பம்

by Staff Writer 15-10-2018 | 6:41 PM

இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நாளை (16) ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் 2 டெஸ்ட் மற்றும் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன. தொடருக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாகும். இந்தத் தொடருக்கான இலங்கை குழாமில் யாழ். மத்தியக்கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந் பெயரிடப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்திய இளையோர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி திறமையை நிரூபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொழும்பு சாஹிரா கல்லூரியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸும் இலங்கை இளையோர் குழாமில்  இடம்பெற்றுள்ளார். தொடரில் இலங்கை இளையோர் அணியை நிபுன் தனஞ்சய வழிநடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.