தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 14-10-2018 | 7:02 AM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (14) நிறைவடைகின்றது. இந்தநிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் கடமையாற்றவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அரசியலமைப்புச் சபையினாலேயே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். 2015 ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயற்பட்டு வருவதுடன், அதன் தலைவராக பி.எம். மனதுங்க கடமையாற்றி வருகின்றார். இதேவேளை, கடந்த 3 வருடங்களாக பொலிஸாருக்கு எதிராக சுமார் 5,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.