திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானம் இரத்து செய்யப்பட வேண்டும்: வசந்த சமரசிங்க
by Bella Dalima 13-10-2018 | 7:28 PM
Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றையும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தாக்கல் செய்துள்ளது.