அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

by Staff Writer 13-10-2018 | 7:46 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் தமது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கைதிகள் உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போது மக்கள் மத்தியில் அரசியல் கைதிகளின் விடுதலை பேசுபொருளாக மாறியுள்ளது.