அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

சுற்றாடலில் காணப்படும் சவால்களை எதிர்கொள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்: ஜனாதிபதி

by Staff Writer 13-10-2018 | 7:13 PM
Colombo (News 1st) சுற்றாடலில் காணப்படும் சவால்களை எதிர்கொள்ள பாடசாலை மாணவர்களிலிருந்து அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். கம்பஹா -பண்டாரநாயக்க வித்தியாலய நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு X-BAN கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.