மூன்று கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

by Staff Writer 13-10-2018 | 11:52 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில், 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேநபரிடமிருந்து 2.426 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் தனது பயணப் பையில் மறைத்துவைத்து போதைப்பொருளை கொண்டுவந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, வீரகுல பொலிஸார் உந்துகொட ருக்கஹவில பகுதியிலுள்ள வீடொன்றின் மேற்கொண்ட சோதனையில் 23 கிராம் 500 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான சந்தேகநபரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதுடன், அவர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, வாழைத்தோட்டம் பகுதியில் 960 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 33 வயதான சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.