ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் 50பேர் காயம்

ஹம்பாந்தோட்டையில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் காயம்

by Staff Writer 12-10-2018 | 7:08 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை புதிய பஸ் தரிப்பிடம் அருகில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர். மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் தெஹியத்த கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். விபத்தில் காயமடைந்தவர்கள் தெபர, ஹம்பந்தோட்டை மற்றும் லுணுகம்வேஹர ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பஸ்களின் சாரதிகளும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்