மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கலந்துரையாடல்

மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் காபந்து அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 10-10-2018 | 10:04 PM
Colombo (News 1st)  ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நேற்று (09) இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஒன்று கூடியுள்ளனர். காபந்து அரசாங்கம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.