சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 09-10-2018 | 12:45 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தித் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தனை - திம்புள்ள தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைக் கோரி இன்று (09) முற்பகல் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கறுப்புக் கொடியை ஏந்தியும் சுலோகங்களை ஏந்தியும் மக்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதேவேளை, சாமிமலை - ஸ்கார்ப்ரோ தோட்ட மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளனர்.