by Staff Writer 09-10-2018 | 9:11 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தத்தை காலதாமதமின்றி கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம், தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த முறை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை ஒரு வருடமும் 8 மாதங்களும் தாமதமடைந்ததால் தொழிலாளர்களுக்கு அதிக நட்டம் ஏற்பட்டதாக சங்கத்தின் தலைவர் கே.செல்வராஜ், அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் தலையிட்டு இந்த மாதத்திற்குள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு தொழில் அமைச்சரிடம் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.