by Staff Writer 08-10-2018 | 1:18 PM
Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனை முன்னிட்டு, ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.