ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-10-2018 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மொரகஹஹேன – கோனபொல முச்சந்தியில் அமைந்துள்ள அரச வங்கியொன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. 02. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 03. அரபுக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படும் தாழமுக்க பிரதேசம் இலங்கையில் இருந்து நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட் கவானா (Brett Kavanaugh), பதவியேற்றுள்ளார். 02. ​கொங்கோ குடியரசின் மேற்குப் பகுதியில், எண்ணெய்த் தாங்கியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த யு.எவ்.சி. குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் (Khabib Nurmagomedov) சம்பியனானார்.