புத்தளத்தில் முச்சக்கரவண்டி பேரணி

அருவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கரவண்டி பேரணி

by Staff Writer 06-10-2018 | 8:39 PM
Colombo (News 1st)  புத்தளம் - அருவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கரவண்டி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புத்தளம் - வேப்பமடு பகுதியிலிருந்து ஆரம்பித்த முச்சக்கவரண்டி பேரணி புத்தளம் - கொழும்பு முகத்திடலை சென்றடைந்தது. முச்சக்கரவண்டிகளில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு முகத்திடலில் சத்தியாக்கிரக போராட்ட இடத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, புத்தளம் - கொழும்பு முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றிரவு சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.