ஆசிரியரை தத்தெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ்

அரசாங்கப் பாடசாலை ஆசிரியரை தத்தெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ்

by Bella Dalima 05-10-2018 | 6:18 PM
இசையமைப்பாளராக இருந்து தற்போது கதாநாயகனாக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், அரசாங்கப் பாடசாலை ஆசிரியரை தத்தெடுத்துள்ளார். தமிழகத்தின் விழுப்புரம் - மரக்காணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை ஆசிரியரை 3 ஆண்டுகளுக்குத் தத்தெடுத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் உட்பட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார். இதுபோன்று போதுமான ஆசிரியர் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் கிராமப்புற பாடசாலை ஆசிரியர்களைத் தத்தெடுத்தால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும். அதனால், இன்னும் பலர் முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என்றும் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.