by Staff Writer 05-10-2018 | 5:05 PM
Colombo (News 1st) கொழும்பு - அவிசாவளை பழைய வீதியின் முல்லேரியா - அங்கொட சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரி வீதி அருகே நின்றுகொண்டிருந்தவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவரின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
களபளுவாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான தாரக இரோசன பெரேரா என்பவரே துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.