Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து பதுளை -ஸ்பிரிங்வௌி தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதுளை -ஸ்பிரிங்வௌி தோட்டத்தொழிலாளர்கள் கடந்த 2 ஆம் திகதி முதல் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்ட வைத்தியசாலைக்கு கடந்த 6 வருடங்களாக வைத்தியர்கள் இன்மை, ஊழியர் சேமலாபநிதி பணத்தினை பெற்றுக்கொள்வதற்கான பதிவுக்கடிதம் வழங்கப்படாமை, லயன் குடியிருப்பு கூரைத்தகடுகளை மாற்றித்தராமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஸ்பிரிங்வௌி தோட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 900 தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பதுளை மாவட்ட தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளளனர்.