கொள்ளுப்பிட்டியில் பெண்ணின் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டியில் பெண்ணின் சடலம் மீட்பு

by Staff Writer 04-10-2018 | 9:29 AM
Colombo (News 1st) கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சுப்பையா பார்வதி என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குறித்த வீட்டில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்