ஜனாதிபதி செயலணி மீண்டும் கூடியது

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி மீண்டும் கூடியது

by Staff Writer 03-10-2018 | 8:09 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடியது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கினார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். வடக்கு, கிழக்கு அபிவிருத்து தொடர்பிலான ஜனாதிபதி செயலணி கூடிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.