தலவாக்கலையில் 298 குடும்பங்கள் இடம்பெயர்வு

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் காரணமாக 298 குடும்பங்கள் இடம்பெயர்வு

by Staff Writer 03-10-2018 | 8:37 PM
Colombo (News 1st)  தலவாக்கலை - கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 298 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றிரவு இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளனர். கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் நேற்று (02) மாலை முதல் பெய்த மழையை அடுத்து, இரவு 11 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இதனை அடுத்து, குடியிருப்புகளில் இருந்து வௌியேறிய மக்கள், தோட்ட ஆலயம், தோட்ட முன்பள்ளி , உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். லூசா தோட்டம் அமைந்துள்ள மலைமுகட்டிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், சில இடங்களில் கற்பாறைகள் சரிந்து வீழ்வதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.