by Staff Writer 03-10-2018 | 12:52 PM
Colombo (News 1st) ஆசிரியர் பரீட்சையில் சித்திபெற்றுள்ள 10,000க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகளுக்கு இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளூடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சிடம் வினவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.