இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் அகலங்க

இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அகலங்க பீரிஸ்

by Staff Writer 03-10-2018 | 2:20 PM
Colombo (News 1st) இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் நீச்சல் வீரரான அகலங்க பீரிஸுக்கு கிட்டியுள்ளது. இவ்வருட இளை​​யோர் ஒலிம்பிக் விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள ஒரேயொரு நீச்சல் வீரர் அகலங்க பீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையோர் ஒலிம்பிக் விழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஆர்ஜென்டினாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர்க்கான ( BACKSTROKE ) நீச்சல் போட்டியில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைவாக அகலங்க பீரிஸுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இளையோர் ஒலிம்பிக் விழாவில் 50 மீற்றர் BACKSTROKE, 100 மீற்றர் BACKSTROKE மற்றும் 50 மீற்றர் ( BUTTERFLY ) நீச்சல் போட்டிகளில் அகலங்க பீரிஸ் பங்கேற்கவுள்ளார். அகலங்க பங்கேற்கவுள்ள நீச்சல் போட்டிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 50 மீற்றர் BACKSTROKE, 100 மீற்றர் BACKSTROKE மற்றும் 50 மீற்றர் ( BUTTERFLY ) நீச்சல் போட்டிகளில் அகலங்க பீரிஸ், தேசிய சாதனையாளராக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.