by Bella Dalima 02-10-2018 | 3:24 PM
Colombo (News 1st) நாட்டின் வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையிலுமுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.