சீரற்ற வானிலையால் 5 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

by Staff Writer 02-10-2018 | 8:24 AM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சீரற்ற வானிலை மற்றும் வரட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வரட்சி காரணமாக, 3,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் சமிந்த பதிராஜ் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட வரட்சியான காலநிலை காரணமாக, நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 2 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், சீரற்ற வானிலை காரணமாகவும் கடும் காற்று காரணாகவும் 2,045 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.