வானிலை குறித்து எச்சரிக்கை

கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

by Staff Writer 02-10-2018 | 8:32 AM
Colombo (News 1st) கடுமையான மழை, கடுங்காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை மற்றும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால், கடல் சீற்றம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சியாக 133.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ரத்மலானையில் பதிவாகியுள்ளது. கொழும்பில் 67.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் குருநாகலையில் 47 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.