நாளை முதல் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி

மழையுடன் கூடிய வானிலை தொடரும் என எதிர்வுகூறல்

by Staff Writer 30-09-2018 | 7:35 AM
Colombo (News 1st) வளிமண்டலத்தில் காணப்படும் தாழ்மட்ட இடையூறு காரணமாக மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால், நாளை முதல் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.