மக்கள் சக்தி V FORCE : இன்று இரத்தினபுரியில்

மக்கள் சக்தி V FORCE : இன்று இரத்தினபுரியில்

by Staff Writer 29-09-2018 | 9:36 AM

நாட்டின் இளம் தலைவர்களின் பலப்படுத்தும் நியூஸ் பெஸ்ட்டின் V FORCE செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டத்தை இரத்தினபுரி - வரகாதொட்ட பாலத்திற்கு அருகில் இன்று காலை ஆரம்பமானது.

இளம் தலைவர்களுடன் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் V FORCE திட்டத்தின் ஊடாக, களுகங்கைக்கு இரு மருங்கிலும் 400 மரக்கன்றுகள் இன்று இதனூடாக நடப்படுகின்றன. மரக்கன்றுகளை நாட்டி, வெள்ள அபாயத்தை குறைப்பதே V FORCE திட்டத்தின் நீண்ட கால நோக்கமாகும். இரத்தினபுரி பிரதேச செயலகம், ஏ பெட் அமைப்பு மற்றும் பசுமைக்கான தேசிய அமைப்பு இம்முறை மக்கள் சக்தி V FORCE உடன் இம்முறை கைகோர்த்துள்ளன. மக்கள் சக்தி V FORCE சின் முதலாவது கட்டம்சீகிரியாவில் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டம் நீர்கொழும்பு முஹாந்திரம்பிட்டி களப்பில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான தன்னார்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்றிருந்ததுடன் இம்முறையும் இணைந்து கொண்டுள்ளனர். நாட்டிற்காக, பொறுப்பை நிறைவேற்றுதல் என்பதே பல்வேறு துறைகளைச் சேர்ந்த இவர்களின் ஒரே நோக்கமாக காணப்படுகின்றது. சுமார் 3 கி.மீகளை எல்லையாகக் கொண்டு இன்று மரக்கன்றுகள் நடப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.