விரிவுரையாளர் மரணம்:திருமலைவளாகத்தில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்: குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 28-09-2018 | 7:23 PM
Colombo (News 1st) கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா - ஆசிக்குளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளர் கடந்த 21 ஆம் திகதி திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.